இர்ஃபான் வீடியோ விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு பறந்த நோட்டீஸ்!

பிரபல யூடியுபர் இர்ஃபான் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையான நிலையில், அதுகுறித்து விளக்கம் கேட்டு தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Oct 22, 2024 - 10:29
இர்ஃபான் வீடியோ விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு பறந்த நோட்டீஸ்!

பிரபல யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் உணவு சார்ந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தனது வீட்டில் நடக்கும் விஷேசங்களையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இர்பான் சென்ற கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தான் காரை இயக்கவில்லை என்றும் தனது ஓட்டுநரே காரை ஓட்டியதாக இர்பான் தரப்பில் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் இர்பானிடம் முறையாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த தகவலை வீடியோவாக வெளியிட்டார். இது இந்திய மருத்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுவாக எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், குழந்தையின் பிறப்பு மற்றும் குழந்தையின் தொப்பு கொடியை வெட்டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்துள்ளவர். குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ள நிலையில் தொப்புள் கொடியை வெட்டியது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி தவறாகும். அதேபோன்று அறுவை சிகிச்சை அரங்கிலும் வீடியோ எடுத்தது தனி நபர் உரிமையை மீறும் செயல் என்றும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட உபகரணங்கள் முறையான மருத்துவ முறையில் சுத்தம் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், யூடியூபர் இர்ஃபான் வீடியோ விவகாரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் மீது புகார். மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டம். வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார் யார் எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விபரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ். மருத்துவ சிகிச்சை அறிக்கையை மருத்துவத்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow