எரியுதடி மாலா... கூவத்தூர் மறந்துப்போச்சா..? வெளுத்து வாங்கிய தவெக..!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர் ராஜினாமாவிற்கு தவெகவின் குதிரை பேரம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுகவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது தவெக.

எரியுதடி மாலா... கூவத்தூர் மறந்துப்போச்சா..? வெளுத்து வாங்கிய தவெக..!

அதிமுக எடப்பாடி அணி, சி.வி.சண்முகம் அணி என பிளவுப்பட்டு இருக்கும் நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்களன மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் ராஜினாமா கடிதத்தை நேற்று(மே 25) சபாநாயகரிடம் சமர்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று பேரும் தவெகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தவெக குதிரை பேரத்தில் ஈடுப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிமுக தரப்பு முன்வைத்து வந்தன.

இந்த நிலையில், அதிமுக தரப்புக்கு பதிலடி கொடுக்கு விதமாக தவெக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது..

தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.

கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது” என்று தவெக பதிலடி கொடுத்துள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow