இறால் பண்ணை வழியில் நடந்து சென்ற மீனவர் அடித்துக் கொலை- போலீஸ் விசாரணை

பெண்கள் உள்பட மக்கள் உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Jan 16, 2024 - 19:45
இறால் பண்ணை வழியில் நடந்து சென்ற மீனவர் அடித்துக் கொலை- போலீஸ் விசாரணை

பாஜக பிரமுகருக்கு சொந்தமான இறால் பண்ணை வழியில் நடந்து சென்ற மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சுந்தர நாயகி புரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலங்காட்டை சேர்ந்தவர் அய்யாவு மகன் பாலசுந்தரம்( 52).அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் காபர் இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த போகி பண்டிகையான 14ஆம் தேதி மாலை வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.இப்பகுதியைச் சார்ந்த மங்கலங்காடு பேக்கிலி காடு உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் அனைவரும் மீன்பிடிக்க செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது பாஜக பிரமுகரான லோகு என்கின்ற லோகேஸ்வரனுக்கு சொந்தமான இறால் பண்ணை. இப்பண்ணை வழியாக மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று பலமுறை பிரச்சனை செய்தும், பெண்கள் உள்பட பலரை அடித்து உதைப்பதாகவும்  சொல்லப்படுகிறது.

 இந்நிலையில் அவ்வழியாகச் மீன்பிடிக்க சென்றுள்ளனர் பாலசுந்தரம் காபர் இருவரும் சென்று உள்ளதாக சொல்லப்படுகிறது. அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள இறால் குளம் உப்பளம் அருகே  வளைவிரித்துவிட்டு காபர் உணவு வாங்க சென்ற நிலையில் தோட்டத்தில் அமர்ந்திருந்த பாலசுந்தரத்தை லோகுவின் உறவினரும் பண்ணை மேனேஜருமான மாரிமுத்து மகன் மகாராஜன் மற்றும் பெயர் தெரியாத மூன்று நபர்கள் சென்று தனிமையில் இருந்த பாலசுந்தரத்தை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் இருந்த பாலசுந்தரத்தை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பாலசுந்தரம் இறந்துவிட்டார்.

இந்நிலையில் அப்பகுதி பெண்கள் உள்பட மக்கள் உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சாதிய வன்மத்தோடு தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையிலும் கொலையாளியும் கொலைக்கு காரணமானவர்களையும் கைது செய்ய வலியுறுத்தியும், கொலைக்கு காரணமான பிரச்சனைக்குரிய இறால் பண்ணையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன கோசம் எழுப்பப்பட்டது.

 இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியாளர் (பொறுப்பு) பாஸ்கரன் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சவுகான் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றன. இதனால்  2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow