சென்னை குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: காலி சரக்குபாட்டிலை திருப்பி கொடுத்தல் ரூ.10 கிடைக்கும் 

நாளை முதல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ 10 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: காலி சரக்குபாட்டிலை திருப்பி கொடுத்தல் ரூ.10 கிடைக்கும் 
Good news for Chennai drinkers

நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்றுலாத்தலங்களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், இயற்கை சூழலுக்​கும், வனவிலங்​கு​களுக்​கும் ஏற்​படும் பாதிப்பை போக்க, காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதைதொடர்ந்து டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யில் உள்ள கடைகளில் காலி மது​பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை செயல்​படுத்​தி​யது. மேலும் இந்த திட்​டத்தை தமிழ்​நாடு முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. இந்த திட்​டத்​தின்​படி விற்​பனை செய்​யப்​படும் மது​பாட்​டில்​கள் மீது ரூ.10 கூடு​தலாக விற்க வேண்​டும். இதையடுத்து வாடிக்கையாளர்​கள் காலி பாட்​டில்​களை திரும்​பத் தரும்​பட்​சத்​தில் ரூ.10 அவர்​களிடம் திருப்பி கொடுக்க வேண்​டும்.

தற்​போது பெரம்​பலூர், அரியலூர், நீல​கிரி, கோவை, நாகை, திரு​வாரூர், தர்​மபுரி, தேனி மற்​றும் குமரி உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இத்​திட்​டம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் வரும் நவம்​பர் மாதத்​துக்​குள் தமிழகம் முழு​வதும் இத்​திட்​டம் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​து இருந்தனர்.

இந்நிலையில்,  தலைநகர் சென்னையில் காலிபாட்டில்களை திருப்ப பெறும் திட்டம் நாளை முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் காலி சரக்கு பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் ரூ.10 திருப்பி கொடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow