குடும்ப தகராறு... பெற்ற தாயை குத்தி கொன்ற கொடூர மகன்.. அதிர்ச்சியில் தூத்துக்குடி

குடும்பத் தகராறு காரணமாக பெற்ற தாயை கத்தியால் குத்தி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 24, 2024 - 11:52
குடும்ப தகராறு... பெற்ற தாயை குத்தி கொன்ற கொடூர மகன்.. அதிர்ச்சியில் தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஞானதீபம் - குலோடில்டா தம்பதிக்கு ஸ்டாலின், ராஜா, ஜெயன் என 3 மகன்களும், ஜான்சி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகள் ஜான்சி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் குலோடில்டா என்ற கில்டா தனது கணவர் ஞானதீபத்தை விட்டு பிரிந்து 2-வது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். கடைசி மகன் ஜெயன் திருமணமாகி அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில் குலோடில்டாவை அடிக்கடி பார்க்க வரும் ஜெயன், அவருடன் வாக்குவாதம் செய்வதும், இதனால் பிரச்னை ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்றிரவு, தாய் குலோடில்டாவை பார்க்க அவரது வீட்டிற்கு ஜெயன் வந்துள்ளார். அப்போது வழக்கம் போல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜெயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாய் குலோடில்டாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் குலோடில்டாவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தப்பி ஓடிய ஜெயனையும் கைது செய்தனர்.

10 மாதம் சுமந்து ஆளாக்கிய தாயை கத்தியால் மகன் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow